தேவாலயங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நீதிமன்ற யோசனைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்வினை என்ன?

'தேவாலயங்கள், அதன் கல்வி நிறுவனங்களை மேலும் பொறுப்புணர்வுடன் நடத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்' எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
'அறநிலையத்துறை, வக்ஃப் வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்வகிக்க முடியாது' என, கிறிஸ்தவ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், 'சொத்துகளைப் பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு அவசியம்' என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.