ஊபர் ஓட்டுநரால் நெடுஞ்சாலையில் இறக்கிவிடப்பட்ட பெண் - குடும்பத்துக்கு ரூ.383 கோடி வழங்க உத்தரவு ஏன்?

கலிபோர்னியா நெடுஞ்சாலையில் 23 வயது பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரை காரில் இருந்து இறங்குமாறு ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 383 கோடி) இழப்பீடு வழங்க உபேர் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.