சேர்வைக்காரன்பட்டி: பட்டாசு ஆலை விபத்தில் 19 உயிர்களை பறிகொடுத்த கிராமம்: பிபிசி களஆய்வு!

விருதுநகர் மாவட்டம் கணக்கார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 19 பேர் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரே நிலைகுலைந்துள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்று வாழ்வாதாரம் இல்லாததால் உயிருக்கு அஞ்சியபடியே மீண்டும் அதே தொழிலுக்குச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு அந்த கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.