பிரதமர் பெனாசிர் பூட்டோ இஸ்லாமாபாத்திலிருந்து ராவல்பிண்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் இருந்த தகவல் துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார், ஜனாதிபதி இஷாக் கான் தங்களது அரசாங்கத்தை கலைக்க இருப்பதாக அவரிடம் கூறினார். அதற்கு பெனாசிர், "அது நடக்காது, ஜாவேத்" என்று பதிலளித்தார்.