
கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வாகனத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக ரூ.3.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.