கேரளத்தில் முதியவருக்கு தனது லைஃப் ஜாக்கெட்டை கொடுத்து வெள்ளத்தில் உயிரிழந்த ‘ரியல் ஹீரோ’

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒரு 61 வயது முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராஜேஷ். அந்த முயற்சியில், தான் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசத்தை முதியவருக்கு அளித்துள்ளார். முதியவர் மீட்கப்பட்ட நிலையில், கடும் வெள்ளத்தில் தனது உயிரை இழந்துள்ளார் ராஜேஷ்.