உடல்களை பல ஆண்டுகள் அடக்கம் செய்யாமல் சாம்பலை மாற்றிக் கொடுத்த ஈமச்சடங்கு நிறுவன உரிமையாளர்

ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.